Friday 6 February 2015

சிங்கக்கொடி புகழ் சம்பந்தனும் கூத்தமைப்பும் 

தேசியத்தலைவரின் வழிநடத்தலில் கீழ் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 2009 மேயின் பின்னர் மேய்ப்பவன் இல்லாத பண்டிக் கூட்டம் போல நடந்து வருகின்றது. இந்தியாவின் அறிவுறுத்தலின்படி முதலில் தமிழ்தேசியத்தையும், அதை நேசிப்பவர்களையும் இழந்தது. ஆயினும் தமிழ் அவர்களைக் கைவிடவில்லை. டக்ளஸ் தேவானந்தாவுடன் ஒப்பிடும்போது இவர்கள் எமது இனத்தை காப்பாற்ற வந்தவர்கள் போன்ற பிரம்மை ஏற்பட்டது. மேலும், தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சியையும் வீட்டுச்சின்னத்தையும் பாவித்து மக்களை ஏமாற்றி வாக்குப் பொறுக்கினார்கள் என்றே கூற வேண்டும். இவர்களுக்கு எதிரான ஒரு மாற்றுக் கட்சியோ அல்லது சக்தியோ இதுவரை இல்லாமல் இருந்ததும் இவர்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு உதவியது. இன்று அந்த நிலை மாறியுள்ளது போலத் தெரிகின்றது. இவர்களுக்கு மாற்றாக, தேசியத்திலும் கொள்கையிலும் உறுதியான ஒரு கட்சியாக, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வளர்ந்து வருகின்றது. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் சிங்கக்கொடி புகழ் சம்பந்தனின் கூத்தமைப்பை வீட்டுக்கு அனுப்புவார்கள் என நான் நம்புகிறேன்! நன்றி! 

No comments:

Post a Comment