Sunday 28 August 2011

வீரமங்கை செங்கொடிக்கு வீரவணக்கம்!

வீரமங்கை செங்கொடி ஏனம்மா இந்த அவசரம்?
தூக்குத்தண்டனைக்காக காத்திருக்கும் மூன்று அண்ணன்மார்களைக் காப்பாற்ற இதைவிட உனக்கு வேறு வழி தெரியவில்லையா? உனது இந்த உயிர்த் தியாகம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மெளனத்தைக் கலைக்குமா? கல்மனம் கொண்ட ஜனாதிபதி பிரதிபா பட்டில் நெஞ்சில் கருணையைப் பிறப்பிக்குமா? கொலைகாரக் காங்கிரசுக்குப் நல்ல புத்தியைப் புகட்டுமா? இத்தாலியக் கழுதை சோனியாவின் கொலை வெறியைத் தணிக்குமா? ஒரு ராஜீவின் உயிருக்காக இன்னும் எத்தனை பேரின் உயிர்களை நாம் காவு கொடுக்க வேண்டும்? தமிழீழத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் இரத்தத்தைக் குடித்தது போதாதா? இன்னும் எத்தனை தமிழர்களின் உயிர் வேண்டும்? முடியாது! இனிமேல் எந்த தமிழரின் உயிரையும் எம்மால் பலி கொடுக்க முடியாது. உனது உயிரே கடைசியாக இருக்கட்டும்! இது நீயேற்றிய ஈகைத் தீயின் மீது நாம் எடுக்கும் சபதமாகும். உனது தியாகம் வீணாகப் போகாது! இது உறுதி!     

No comments:

Post a Comment