Wednesday 5 October 2011

புலம்பெயர் ஈழத் தமிழர்களே

புலம்பெயர் ஈழத் தமிழர்களே-உங்கள்
போக்கில் வேண்டும் மாற்றங்களே
நிலவிட வேண்டும் ஒற்றுமையே-உடன்
நீங்கிட வேண்டும் வேற்றுமையே
வலைதனில் காணும் கருத்துகளே-கவிதை
வடித்திட காரணம் பொறுத்திடுக
நிலைதனை தெளிவாய் அறிவீரே-நீர்
நிச்சியம் ஈழம் பெறுவீரே

இதுவரை நடந்ததை எண்ணாதீர்-கடந்த
எதையும் பெரிது பண்ணாதீர்
புதுவழி காணல் ஒன்றென்றே-அறப்
போரினை தொடங்குவீர் நீரின்றே
அதுவரை நடக்கும பேயாட்டம்-சிங்கள
ஆணவ நாய்களின் வாலாட்டம்
எதுவரை இந்தியா கைகொடுக்கும்-அதை
எதிர் வரும் காலம் காண்பிக்கும்

வஞ்சக சிங்களர் சொயலாலே-உங்கள்
வாழ்வில் வீசிய புய லாலே
தஞ்சம் தேடி உலக கெங்கும்-இன்றே
தங்கிப் பலரே அங்கங் கும்
பஞ்சம் இன்றி வாழ் கின்றீர்-பெரும்
பட்டம் பதவி சூழ் கின்றீர
நெஞ்சில் நிம்மதி ஒரு நாளும்-ஈழ
நினைவால் வாரா துயர் மூளும்

பிறந்த மண்ணை மறப் பீரா- விட்டுப்
பிரிந்த உறவை மறப் பீரா
திறந்த வெளியில் முள் வேலி-அங்கே
தேம்பும் மக்களை மறப்பீரா
இறந்த காலத்தை மறந் திடுவீர்-தனி
ஈழம் காண முனைந் திடுவீர்
சிறந்த முடிவை எடுப் பீரே-என
செப்பினேன் வேண்டி முடிப் பீரே

******* புலவர் சா இராமாநுசம்

No comments:

Post a Comment