Monday 15 August 2011

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

ஒற்றுமை என்பதே இல்லை

ஆடிப் பாடி மகிழ்கிறோம்

முடிவில் அடிதடியே

ஓங்கி உரத்த குரலில்

ஒலிக்கிறோம்

விடுதலை வேண்டி

ஒருமித்த குரலில்

ஒருங்கினையா மனதுடன்

எட்டு திக்கும்

முரசறைகிறோம்

எங்கள் தமிழென்று

நாம் தமிழர் என்றும்

எட்டி காலில்

பிடித்து இழுத்து

விழுத்துகிறோம்

முன்னேற எம்மினத்தை

விடாது தள்ளுகிறோம் குழியில்

தமிழா ஏனடா

உனக்கு இந்த அற்ப புத்தி

ஏட்டில் எழுதிவிட்டால்

நிலைக்குமாடா ஒற்றுமை

மனதில் விதைத்து

கைகளை இறுக பற்று

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

நன்றி: நிலவில் ராதா.

No comments:

Post a Comment