Wednesday 17 August 2011

மூன்று முத்துக்கள் தூக்கு கயிற்றில் ???

மூவேந்தர்
முறையோடு
முறையாக நல்லாட்சி
புரிந்த மண்ணில்
மூன்று முத்துக்கள்
தூக்கு கயிற்றில்
கொடுமையிலும்
கொடுமையடா
கேட்பாரில்லாமல்
கேடுகளே தொடரும்
புரிந்திடடா தமிழா
புலியென்று சொல்லிடலாம்
என்ன தவறு செய்தார்
பேரறிவாளன் பெயர் தனை
கழுவிலே எழுதி
காலடியில் வீழ்த்திட
முயற்சியாடா
தமிழக தமிழனின்
எழுச்சியை தடுக்கவே!
தூக்கு மேடை
புதிதல்ல எமக்கு
அதற்கும் மனு நீதி
வேண்டுமடா
வானரங்களின் தீர்ப்பில்
வகை யுண்டோடா
வரலாற்றை மாற்றிட
தடைகளை தகிர்த்திடு
தமிழா தமிழா

நன்றி : நிலவில் ராதா~

No comments:

Post a Comment